ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.