யாழில் நேற்று சனிக்கிழமை (02) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றையதினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
யாழில் கிணற்றில் விழுந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space