சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் 07 பெண்கள் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் படபொல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 22 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் கந்தானை, கம்பஹா, கினிகத்தேனை, மாத்தளை, குருணாகல், பதுளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபச்சார விடுதி முற்றுகை ; 08 பேர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space