முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (16) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், இறுதி யுத்தத்தின்போது வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை உணர்ந்து அனுபவித்த மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கிவைத்தனர்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space