மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வித் துறைகளுக்கான தேசியக் கொள்கைகளை வகுப்பதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இரு பாடப்பரப்புகளுக்கும் முறையான தேசியக் கொள்கைகள் இல்லாத காரணத்தினால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனை நிவர்த்தி செய்வதே இக்குழுக்களின் பிரதான நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்திற்காக தேசிய கல்வி ஆணைக்குழு முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் பிரதி அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய கொள்கைகளை வகுக்க இரு குழுக்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space