இறுதி யுத்தத்தின் போது வீரச்சாவடைந்த 25 மாவீரர்களுக்கான அனைத்துலக ரீதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கடந்த : 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15.00 முதல் 18.00 மணிவரை நுவாசி லுசெக் பகுதியில் உணர்வோடு இடம்பெற்றது.
25 மாவீரர்களின் திரு உருவப்படங்களையும் பூமரச் செடிகளையும் மாணவர்கள் தாங்கி அணி வகுத்து நிற்க,இந்நிகழ்வில் பொதுச்சுடரினை அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனைத் துணைப் பொறுப்பாளர் சிவா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் புவி அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் பொதுப் படத்திற்கான ஈகைச்சுடரினை நுவாசிலுசெக் நகர துணை முதல்வர் ஏற்றிவைத்தார்.மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து வீரவணக்கம் உறுதிப்படுத்தல் அறிக்கைகள் வாசித்தல் (மொத்தம் 25 மாவீரர்கள்) இடம்பெற்றது.தொடர்ந்து மாவீரர் குடும்பத்திற்கு தேசியக்கொடி மற்றும் மாவீரர் திரு உருவப்படம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. தேசியக்கொடி இறக்கல் கையேற்றல் என்பவற்றோடு மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கு மலர்க் குன்றுகளும் வழங்கப்பட்டன.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது .
பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற 25 மாவீரர்களுக்கான அனைத்துலக ரீதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space