நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைதிகள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் மதியம் ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தில் படுகாயமடைந்த 20 கைதிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 29 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிக்கு விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இரு கைதிகள் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space