நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (21) செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பபடவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்வத்தை தடுக்க தவறியதால், அவர் தனது பாெறுப்பை சரிவர நிறைவேற்ற தவறியை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுத்தி வந்தனர். என்றாலும் நீதி அமைச்சர் பதவி விலகாத நிலையில் அவருக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்து, கடந்தவாரம் அதுதொடர்பான பிரேரணையில் கைச்சாத்திட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பாராளுமன்றம் கூடும்போது, நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்க தீ்ர்மானித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு நீதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதியினால் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் முன்னால் சென்று அமைச்சர் சிறைச்சாலை நெருக்கடிக்கான தீர்வு மற்றும் அதனை தடுப்பதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்க வேண்டும். அதில் பதிலளிப்பதென்றால் அமைச்சுப் பதவியில் இருந்துகொண்டு அதனை செய்ய முடியாது. அந்தப் பதவியில் இருந்து விலக வேண்டும்.
இவ்வாறான பல கோரிக்கைகளை முன்வைத்தே நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் கூடிய விரைவில் அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space