பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட ஒருங்கமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா சனிக்கிழமை (04) திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு கள விஜயம் மேற்கொண்டார்.
காலப்போக்கில் இயற்கை காரணங்களால் சேதமடைந்துள்ள இத்தலம், பின்னர் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளால் கடந்த ஆட்சிக் காலங்களில் விஷமிகளால் மேலும் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளத்தை உரிய முறையில் பாதுகாக்கவும், இத்தளத்தை சென்றடையும் வீதியைச் செப்பனிடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கள ஆய்வில் சேருவிலை பிரதேச சபை உறுப்பினர் செல்வராசா சச்சிதேவன், வைத்திய கலாநிதி சதீஸ்குமார், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space