சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!
Ad Space
Ad Space
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விடயத்திற்கு முறையான, நீதியான தீர்வு கோரியும் தென்மராட்சி சமூகத்தால் இந்த கடையடைப்பு போராட்டம் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்பதாக சாவகச்சேரி நகரசபை சபையின் உப தவிசாளர், ஆணையாளரின் அறிவிப்பை தூக்கி வீசியதாக தெரிவித்து ஆளுநரால் பதவிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space