இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த பதிராஜவை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய கட்டுப்பாட்டாளர் நாயகமாக நிரந்தர அடிப்படையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2025 மே மாதம் முதல் இப்பதவியில் பதில் அதிகாரியாக கடமையாற்றி வந்த இராஜ் சமிந்த, தற்போது நிரந்தர அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிக்க அமைச்சரவை அனுமதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space