கிண்ணியா பொலிஸ் பிரிவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(7.7.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் 55 வயதான கிண்ணியா, மாஞ்சோலை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை இவ்வாறு கைது செய்ததாக திருகோணமலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச்சங்கையும் சட்ட நடவடிக்கைக்காக கிண்ணியா பொலிஸ் வசம் ஒப்படைத்ததாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கிண்ணியாவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space