மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய 24 மணிநேர அவசர உதவித் தொலைபேசி சேவை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடி மற்றும் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை சார்ந்த எரிபொருள் விநியோகத் தடைகள் அல்லது மேலதிகத் தேவைகள் குறித்த புகார்களை 0114323389 என்ற இலக்கத்துக்கு 24 மணிநேரமும் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் சிக்கல்களைத் தீர்க்க 24 மணிநேர தொலைபேசிச் சேவை அறிமுகம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space