புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஆறு நாட்களில் 1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போக்குவரத்து சபையின் தலைவர், புத்தாண்டுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து சேவைகள் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை ஏப்ரல் 11ஆம் திகதி 213 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், இது சபையின் வரலாற்றில் ஒரே நாளில் ஈட்டப்பட்ட மிக உயர்ந்த வருவாய் என்றும் கனகரத்ன கூறினார்.
இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றுப் பதிவு : ஆறு நாட்களில் 1 பில்லியன் வருமானம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space