தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் காலம் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி புஷ்பிக ஜெயதாச முன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நுவரெலியா மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், அவரின் மனைவி, குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி மற்றும் மேனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி (பிரதான பொலிஸ் பரிசோதகர்) ஆகிய சந்தேகநபர்களுக்கே எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இயன்முறை சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space