தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை சிறிலங்கா காவல்துறையினருக்குத் தெரியாதாம், அதனால் தான் நெல்லியடிஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடி ஏந்தி வந்தவர்களை பிடிக்கவில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றனர் யாழ். தலமை காவல்துறை அதிகாரிகள்.
இன்று யாழ்.கவல்துறையின் தலைமைக் காரியாலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்.மாவட்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
சிறிலங்கா காவல்துறையினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக் கொடி எது என்று தெரியாதாம், அவ்வாறுஅவர்களுக்கு புலிக்கொடியை அடையாளம் காண முடிந்திருந்தால் அவர்கள் ஆர்பாட்டத்தில் புலிக்கொடியை ஏந்தி வந்தவர்களை சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்திருப்பார்களாம்.இவ்விடையம் தொடரபாக தகவல் ஏதேனும் தெரிந்திருந்தால் எமக்குச் செல்லுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றோம்.குறித்த நபர்கள் வந்த மோட்டார் சைக்கில் இலக்கம் தெரிந்தால் சொல்லுங்கள் ஒரு நாளுக்குள் அவர்களைப் பிடித்துக்காட்டுகின்றோம்.
இவ்வாறு வீர வசனங்கள் பேசியுள்ளதுடன் அன்றை ஆர்ப்பாட்டத்தில் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதும்,தெளிவாகத் தெரியும் மோட்டார் சைக்கில் இலக்கத்தினை பார்கவில்லை எனவும், முட்டாள்தனமான பதிலை இன்று ஊடகவியலாளர்மத்தியில் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்
யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் சுவாரஸ்யமான நிகழ்வாக காவல்துறையினரின் இவ்வாறான பிதட்டல் அமைந்துள்ளது.