மன்னார் சௌத்பார் காணிஅபகரிப்பு குறித்து முறையிட்டவருக்கு எதிராக படையினர் முறைப்பாடு!


ஜூன் 28, 2012
 


மன்னார் சௌத்பார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமானதாக கூறப்படும் 45 ஏக்கர் காணியில் படையினர் முகாம் அமைப்பது தொடர்பில் அந்தக் காணிக்கு உரிமை கோரியவருக்கு எதிராக மன்னார் காவல்துறை நிலையத்தில் படையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.


மன்னார் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சௌத்பார் பகுதியில் உள்ள வெற்றுக்காணியில் கடந்த 10 தினங்களாக படையினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படையினர் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் காணி தன்னுடையதென உரிமை கோரியுள்ள தனி நபர் ஒருவர் தனக்கு அப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் காணியுள்ள நிலையில் அப்பகுதியில் படையினர்கள் தனது காணிக்குள் முகாம் அமைக்கும் நோக்கில் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் எனவே உடனடியாக துப்புரவு பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த திங்கட்கிழமை மன்னார் காவல்துறை நிலையத்தில் காணிக்கு உரிமை கோரியவருக்கு எதிராக படையினர் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் காவல்துறை நிலையத்தில் காணிக்கு உரிமை கோரியவரும் முறைப்பாட்டை மேற்கொண்டவரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் சார்பில் முறைப்பாட்டை மேற்கொண்ட மேஜர் தர அதிகாரியொருவர் காவல்துறை நிலையத்தில் பிரசன்னமானார்.

இந்நிலையில் தாம் துப்புரவு செய்யும் காணி முற்று முழுதாக அரச காணியெனவும் மன்னார் பிதேச செயலாளர் படையினரின் பயன்பாட்டிற்காக இந்தக் காணியை தங்களுக்கு வழங்கியதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த இராணுவ அதிகாரி பொலிஸாரின் விசாரனைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் காணிக்கு உரிமை கோரியவர் இந்த காணி தனது காணி எனவும் வலிதான உறுதி மூலம் தனது மகளுக்கு இந்த 45 ஏக்கர் காணியை நான் உரிமை மாற்றம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வவுனியாவில் உள்ள நில அளவைத் திணைக்களத்திலிருந்து வரைபடங்களை தருவித்து பிரஸ்தாப காணி தனியாருக்கு சொந்தமானதா?அல்லது அரச காணியா? என்பது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படுமென இரு தரப்பிற்கும் காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.

 

 


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்