ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை உருவாக்க உதவாது என்பதனை, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவதூறு அரசியலிற்குள் செல்ல விரும்பாததால் இதனை இத்தோடு விட்டு விடுகிறேன்.
ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் உருவாக வேண்டிய கால கட்டமிது. தமிழ், முஸ்லிம், சிவில் சமூகங்களும் முற்போக்கான சிங்கள சிவில் சமூகங்களும் இணைய வேண்டிய தேவையொன்று ஏற்படுகிறது. கட்சிகளைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அண்மைக் காலமாக தெரிவித்து வரும் கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் வட,கிழக்கில், அரசால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ நிர்வாக மயமாக்கல் என்பன தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதை கருத்திற் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது.
மேலும்...