தமிழக அகதி முகாம்களில் ஈழத்தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே அவர்களை ஆபத்தான படகுகள் மூலம் அவுஸ்திரேதலியா நோக்கிச் செல்வதற்கு தூண்டுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழக அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் கடுமையான கட்டுப்பாடுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திப்பதாக அந்தக் கட்சியின் தமிழக மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.எம்.நிசாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள கடற்கரையை பயன்படுத்தி சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 150க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளில் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தின் திருநெல்வேலி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி உள்ளிட்ட சில அமைப்புக்களை சேர்ந்த உறுப்பினர்கள் கேரள காவல்துறையினருக்கு எதிராக மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நிசாம், தமிழக அகதி முகாம்களில் தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே அவர்களை ஆபத்தான படகுகள் மூலம் அவுஸ்திரேதலியா நோக்கிச் செல்வதற்கு தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.