யாழ்குடா கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமையே சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மீனவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோத தங்குகூசி வலைமூலம் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றம் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
மேலும் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அழித்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட வலைகளாலும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமலும் பதிவு செய்யபப்படாத படகுகள் மூலமும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சட்டவிரோதமாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட பரிசோதகர் தெரிவித்துள்ளார்.