மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்   கப்பல் ஒன்று இன்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.