அரியாலை கடற்கரையில் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்பு

யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் நேற்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளன.

மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வெடிமருந்து குச்சிகளை சட்ட விரோத மீன்பிடிக்கு கடற்தொழிலாளர்கள் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.