சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனை அமெரிக்கத்தூதர் ஜூலி சங் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

சந்திப்புக் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனான சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

பிரச்சினைகளில் இருந்து தீர்வைப்பெற்று முன்னோக்கிச் செல்வது, சிறுபான்மையினருக்கான தேசிய அடையாளம், சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறல்  மற்றும் நீதிக்கான மக்களின் கோரிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு தீர்வைப்பெறுவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.