கசிப்புடன் இருவர் கைது

காத்தான்குடி ஆரையம்பதி சிகரம் பகுதியில் 74000 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் வியாழக்கிழமை(13) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறிப்பிட்ட சந்தேக நபர்கர்களில் ஒருவரிடமிருந்து  70000 மில்லி லீற்றர் மற்றொருவரிடமிருந்து 4000 மில்லி லீற்றர்  கசிப்பும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கைதான ஆரையைம்பதியைச் சேர்ந்த 30,31 வயதுடைய சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.